Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்பாடி விபத்து: இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காட்பாடி வெடி ஆலை விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை தரப்படும் என்று தமிழக வெடிபொருள்உற்பத்தி தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் திரிபாதி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழக வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் டெட்டனேட்டர்கள்திடீரென வெடித்ததில் 24 பேர் பலியானார்கள்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், நிறுவன நிர்வாக இயக்குநர் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விபத்து குறித்து நான்கு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 6 வாரத்தில்இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

இறந்தவர்களில் ஒருவரது அடையாளம் மட்டும் தெரியவில்லை. அவரது உடலை டி.என்.ஏ. சோதனை செய்துஅடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரியஇன்சூரன்ஸ், பி.எப்., கிராஜுட்டி உள்ளிட்ட அனைத்துத் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிறுவனத்திலேயே வேலை போட்டுத் தருவது குறித்து பரிசீலீக்கப்பட்டுவருகிறது. விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+