ஒட்டன்சத்திரத்தில் வாயில் கத்தியால் குத்தி பெண் கொலை; நகை கொள்ளை
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொள்ளைக் கும்பல் ஒரு பெண்ணின் வாயில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றது.
சுப்பிரமணி, தாராபுரத்தில் தங்கி வேலைசெய்துவிட்டு, வாரத்திற்கு 2 நாட்கள் விமுறையில் மட்டும்தான் வீட்டுக்குவருவார். இதனால் செல்வராணி தனது கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட 4 பேர் அடங்கிய ஒரு கொள்ளைக்கும்பல், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில்செல்வராணியின் வீட்டுக்குள் புகுந்தது.
தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த செல்வராணி இந்த கூட்டத்தைப் பார்த்து திடுக்கிட்டார். பிறகுசுதாரித்துத் தப்ப முயலும் போது கொள்ளையர்கள் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டனர்.
பிறகு, "கழுத்தில் உள்ள நகைகளைக் கழற்றிக் கொடுக்கா விட்டால் குழந்தையைக் கொன்று விடுவோம்" என்றுமிரட்டினார்கள். இதையடுத்து செல்வராணியும் தனது நகைகளைக் கழற்றிக் கொடுத்து விட்டு, தனது குழந்தையைவாங்கிக் கொண்டார். அதன் பிறகு, "திருடன், திருடன்" என்று கத்த ஆரம்பித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் செல்ராணியின் வாயில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள்.இந்தச் சம்பவம் குறித்து யாருக்கும் தெரியவில்லை.
பிறகு 2 மணி நேரம் கழித்து 6.30 மணியளவில், செல்வராணியின் குழந்தை தொடர்ந்து அழுவதை பக்கத்துவீட்டினர் கேட்டனர். அவர்கள் வந்து பார்த்தபோது, வாயில் கத்தியுடன் செல்வராணி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தார்கள்.
உடனடியாக செல்வராணி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அந்தநேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலப்பட்ார்.
ஆனால், அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே செல்வராணி பரிதாபமாக மரணமடைந்தார். இந்தச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.