நகை மட்டும் போதும்... நூதன திருடன் பிடிபட்டான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஓடும் பஸ்களில் நகைகளை மட்டும் திருடும் நூதன திருடனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, சின்னமலை, வேளச்சேரி சாலை ஆகியபகுதிகளில் ஓடும் பஸ்களில் அடிக்கடி பெண்கள், குழந்தைகளின் நகைகள் திருடப்படுவதாக நகர காவல்துறைஆணையர் முத்துக்கருப்பனுக்குப் புகார் வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து திருடர்களைப்பிடிக்க ஆணையர் ஆணையிட்டார். இன்ஸ்பெக்டர் சுப்பையாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாறு வேடத்தில் சைதாப்பேட்டை பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சைதை பஸ் நிலையம் அருகில் அவர்கள் ரோந்தில் இருந்தபோது ஒரு நபர் சந்தேகம் அளிக்கும் விதத்தில் நடமாடிக்கொண்டிருந்தார். அவரை அணுகிய போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

உடனடியாக அவரை அள்ளிக் கொண்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த "கவனிப்பில்"அந்த நபர் தனது தகவல்களைக் கூறினார்.

இவரது பெயர் பிரகாஷ் என்ற சலீம். பஸ்களில் நகைகளைத் திருடுவது இவரது தொழிலாம். அதுவும் நகைகளைமட்டுமே திருடுவது இவரது வழக்கம். பணத்தைத் திருடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தாலும் கூட திருட மாட்டாராம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் அணிந்திருக்கும் தங்க நகைகளை திருடிக் கொண்டு நழுவி விடுவாராம்.அவரிடமிருந்து ரூ.50,000 மதிப்புள்ள நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+