கோவை அருகே இன்று பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி
கோயம்புத்தூர்:
ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளா சென்று கொண்டிருந்தவர்கள் சென்ற பஸ் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை தலைகீழாகக் கவிழ்ந்ததில், 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.
கேரள மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அடுத்த வாரம் வருகிறது. இந்தப்பண்டிகைையை குடும்பத்தாருடன் கொண்டாட, பெங்களூரிலிருந்து சொகுசு பேருந்து மூலம் கேரளாவைச் சேர்ந்தபலர் கொச்சிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள வளைவில் பஸ்சை வேகமாக திருப்ப டிரைவர் முயன்றார். அப்போதுதிடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications