ஜெ. வழக்குகள்: 17 அப்பீல் மனுக்களை சேர்த்து விசாரிக்க அரசு வக்கீல் கோரிக்கை
சென்னை:
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 அப்பீல் மனுக்களையும்சேர்த்து ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் வெங்கடபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
டான்சி நில ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட 6 பேர்அப்பீல் மனு செய்துள்ளனர். ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 420, 169 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்களைத்தண்டிக்க வேண்டும் என்று அரசும் அப்பீல் மனு செய்துள்ளது.
இதேபோல சசி என்டர்பிரைசஸ் வழக்கில் வழங்ககப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சசிகலாஉட்பட 5 பேரும், தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசும் அப்பீல் மனு செய்துள்ளது.
மேலும் கொடைக்காணல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேர்மனு செய்துள்ளனர்.
இந்த 2 வழக்குகளிலும் மொத்தம் 17 அப்பீல் மனுக்கள் உள்ளன. ஆனால் டான்சி வழக்கு சம்பந்தமான 2 மனுக்கள்மட்டும் தான் நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வருகிறது.
இதில் 2 மனுக்களை மட்டும் விசாரணைக்கு எடுப்பது நல்லதல்ல. அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுக்கவேண்டும். இதற்கு கால அவகாசம் வேண்டும். எனவே வருகிற 27 ம் தேதி நடக்கவிருக்கும் விசாரணையைத்தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அரசு வக்கீல் தனது மனுவில் கூறியிருக்கிறார்.