தனியார் டிவிக்களுக்கு சட்டசபையில் அனுமதி இல்லை: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்க எந்த தனியார் டிவிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, பிலிம்ஸ் டிவிசன்மட்டும் தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஒரு கேள்விஎழுப்பினார். அப்போது அவர் சட்டசபையில் படம்பிடிக்க எந்தெந்த டிவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றுகேட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

அதிமுக அரசு பதவியேற்றவுடன் நடந்த முதல் கூட்டத் தொடரில், கவர்னர் உரையை படம்பிடிக்க அனைத்துதனியார் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் அனைத்து டிவிக்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுமதிவழங்கப்பட்டது.

அதன் பிறகு கடந்த 2 நாட்களாக பிலிம்ஸ் டிவிசன் மட்டும்தான் சட்டசபை நிகழ்ச்சிகளை படம்பிடித்து வருகிறது.

தேவைப்பட்டால், பிலிம்ஸ் டிவிசனிடம் இருந்து, அந்த படச்சுருளில் தேவையான பகுதிகளை வாங்கி தனியார்தொலைக்காட்சிகள் போட்டுக் கொள்ளலாம்.

பட்ஜெட் தாக்கல் செய்தபோது நேரடி ஒளிபரப்புச் செய்யும் வசதி இல்லாததால் தனியார் டிவிக்கள் எதுவும்அனுமதி கேட்கவில்லை. ஆனால் தூர்தர்ஷன், ஆல்இந்தியரேடியோ மற்றும் பிலிம்ஸ் டிவிஷன் ஆகியவைபடம்பிடித்தன என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+