தனியார் டிவிக்களுக்கு சட்டசபையில் அனுமதி இல்லை: ஜெ.
சென்னை:
சட்டசபை நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்க எந்த தனியார் டிவிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, பிலிம்ஸ் டிவிசன்மட்டும் தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
அதிமுக அரசு பதவியேற்றவுடன் நடந்த முதல் கூட்டத் தொடரில், கவர்னர் உரையை படம்பிடிக்க அனைத்துதனியார் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் அனைத்து டிவிக்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுமதிவழங்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த 2 நாட்களாக பிலிம்ஸ் டிவிசன் மட்டும்தான் சட்டசபை நிகழ்ச்சிகளை படம்பிடித்து வருகிறது.
தேவைப்பட்டால், பிலிம்ஸ் டிவிசனிடம் இருந்து, அந்த படச்சுருளில் தேவையான பகுதிகளை வாங்கி தனியார்தொலைக்காட்சிகள் போட்டுக் கொள்ளலாம்.
பட்ஜெட் தாக்கல் செய்தபோது நேரடி ஒளிபரப்புச் செய்யும் வசதி இல்லாததால் தனியார் டிவிக்கள் எதுவும்அனுமதி கேட்கவில்லை. ஆனால் தூர்தர்ஷன், ஆல்இந்தியரேடியோ மற்றும் பிலிம்ஸ் டிவிஷன் ஆகியவைபடம்பிடித்தன என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications