தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக மாநில திட்டக் குழு உறுப்பினர் டி.வி. அந்தோணிகூறியுள்ளார்.
தமிழகத்தில் சிசுக் கொலை விகிதம் அதிக அளவில் உள்ளது. 1000க்கு 50 என்ற அளவில் இது தற்போது உள்ளது.இதை 1000க்கு 30 ஆகக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதே போல, பிறப்பு விகிதத்தைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது1000க்கு 19 ஆக உள்ள பிறப்பு விகிதத்தை 1000க்கு 15 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண் சிசுக் கொலைகள் அரசின் தொடர் நடவடிக்கையால் குறைந்து விட்டது. இருப்பினும் சேலம், தர்மபுரி ஆகியமாவட்டங்களில் இது இப்போதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
ஆனால், மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை மிகப் பெரிய அளவில் குறைந்து விட்டது என்றார்அந்தோணி.












Click it and Unblock the Notifications