For Daily Alerts
Just In
திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதி 4 பேர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கலவார்பட்டி அருகே இன்று (வியாழக்கிழமை) காலை காரும் லாரியும் நேருக்கு நேர்மோதியதில், ஒரு குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்தனர்.
கலவார்பட்டி அருகே, கரூர்-வேடசந்தூர் ரோட்டில் இந்த 2 வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.இதனால், அந்தக் கார் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இறந்தவர்களில்ஒரு குழந்தையும் 2 பெண்களும் அடக்கம்.
விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]