For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டான்சி வழக்கு: திமுகவின் அப்பீல் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் மத்திய அரசு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரி,திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் பாரதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி என்ற நிறுவனம் சென்னையில் உள்ளது. இதன் நிலத்தை ஜெயலலிதா முன்புமுதல்வராக இருந்தபோது, குறைந்த மதிப்பீட்டில் வாங்கிவிட்டார். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றுகூறி ஜெயலலிதா, சசிகலா உட்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.

தனி நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்பழகன் ஜெயலலிதா உட்பட அந்த 6 பேருக்கும் 3ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தண்டணையை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்தார். இருப்பினும்இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றிருப்பதால், மாநில அரசு வக்கீல்கள்வாதாடினால் நியாமாக வாதாடுவார்களா என்பது கேள்விக்குறி. அதனால் இந்த வழக்கு பற்றி விசாரிக்க மத்தியஅரசு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரி பாரதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல்செய்தார். இவர் ஆலந்தூர் பகுதி திமுக பிரமுகர்.

இதையடுத்து, முன்னாள் அட்வகேட் ஜெனரல் வெங்கடபதியை அரசு வக்கீலாக உயர்நீதி மன்றம் நியமித்தது.

ஆனால் பாரதி இதையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர்சார்பாக ஆஜராகிய வக்கீல் அந்த அப்பீல் மனுவை வற்புறுத்த வில்லை என்று கூறிவிட்டார். எனவே அந்த மனுவை3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் டான்சி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்கள்வரும் 27ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X