காட்பாடி விபத்து குறித்து சட்டசபையில் மாஜி அமைச்சர் தர்ணா
சென்னை:
வேலூர் மாவட்டம் காட்பாடி வெடி மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக சட்டசபையில்உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமானதுரைமுருகன் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா செய்தார்.
அப்போது சபாநாயகர் காளிமுத்து, "சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தயாராக இருந்தால் உடனடியாக விவாதத்தைவைத்துக் கொள்ளலாம்" என்றார்.
உடனே தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் எழுந்து, "வெடிவிபத்து தொடர்பான சில தகவல்கள் தனக்குத்தேவைப்படுவதால் விவாதத்தை வெள்ளிக்கிழமை காலை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.
அதை ஏற்காத துரைமுருகன், "உடனடியாக விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கோரிக்கை நிறைவேறும்வரை சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்வேன்" என்று கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில்ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் வைத்தியலிங்கம் எழுந்து, "பிற்பகலில் இது தொடர்பான விவாதத்தை வைத்துக்கொள்ளலாம்" என்றார்.
இதையடுத்து, "அமைச்சர் விவாதத்திற்கு ஒத்துக் கொண்டு விட்டார். துரைருகன் அவரது இருக்கைக்குத் திரும்பவேண்டும்" என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற துரைமுருகன், தனது இருக்கைக்குத் திரும்பினார்.