பா.ஜ.கவிடம் அடகு போன திராவிட கட்சிகள் - இளங்கோவன் தாக்கு
சென்னை:
தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் பதவிக்காக தங்களை பாரதீய ஜனதா கட்சியிடம் அடகுவைத்துவிட்டன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
தமிழகத்தில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிலும்சிறுபான்மையினர் தங்கள் உணர்வுகளைப் ாபதுகாக்க காங்கிரசால் மட்டும் தான் முடியும் என்று எண்ணுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள திமுக, அமிதமுக போன்ற திராவிடக் கட்சிகள் பதவி ஆசையில் எதையும் செய்யத் தயாராகஉள்ளனர். இதற்காக தங்கள் கட்சிகளை, பாரதீய ஜனதாவிடம் அடகு வைத்துள்ளனர். அவர்கள் காலில் இந்த 2கட்சிகளும் மாறி மாறி விழுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதை நாம்தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.திமுக, அதிமுக கட்சிகள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், ஊழல் வழக்குகளில் தப்பிக்க வேண்டும்என்ற சுய நலத்துடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தான் சிறுபான்மையினருக்கு சிறந்த பாதுகாப்புக் கொடுக்க முடியும்.
பா.ஜ.க தனது புதிய கல்விக் கொள்ளையை மாற்றிக் கொள்ள வேண்டும். அது மதவெறியைத் தூண்டும் விதத்தில்அமைந்துள்ளது. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.












Click it and Unblock the Notifications