ஐ.பி.எஸ். அதிகாரிகளை அனுப்பாவிட்டால் நடவடிக்கை... மத்திய அமைச்சர்
திருச்சி:
3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப தமிழக அரசு மறுத்தால் அதன் மீது மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மாநிலப் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு முழுஉரிமை உள்ளது. அதன் அடிப்படையில்தான் தமிழக அரசிடம் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அனுப்புமாறு மத்தியஉள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் தமிழக அரசு அதிகாரிகளை அனுப்ப மறுத்தால், மாநில, மததிய அரசுகளின் உறவு முறியாதவகையில் அந்த அதிகாரிகளை மத்திய பணிக்கு வரவழைக்கத் தேவையான, உரிய நடவடிக்கையை மத்திய அரசுஎடுக்கும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணி அமையுமா அல்லது பழைய கூட்டணிகளே தொடருமா என்பதுதேர்தல் அறிவுப்புக்குப் பிறகுதான் தெரிய வரும். இப்போதே அதைக் கணிப்பது இயலாத காரியம் என்றார்செஞ்சி ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications