சென்னையில் துப்பாக்கி விற்ற 2 இலங்கை வாலிபர்கள் கைது
சென்னை:
சென்னையில் கைத் துப்பாக்கிகளை கள்ளத்தனமாக விற்க முயன்ற 2 இலங்கை வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்த நபர்களை மாறுவேடத்தில் அவர்கள் அணுகினர். அப்போதுஅவர்கள் தங்களிடம் கைத் துப்பாக்கிகள் இருப்பதாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
தங்களுக்கே அந்த கைத்துப்பாக்கிகளை விற்குமாறு போலீஸார் கூறினர். இதையடுத்து அவர்கள்கைத்துப்பாக்கிகளை எடுத்துக் கொடுத்தபோது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், அந்த 2 பேரும் இலங்கையைச் சேர்ந்த ராகவன் மற்றும்சிவரூபன் என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதிகளாக தப்பிவந்தனர். பின்னர் ராமேஸ்வரம் அகதிகள் முகாமிலிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளனர்.
சென்னைக்கு வருவதற்கு முன்பு மைசூருக்குச் சென்று பிழைப்பு நடத்தியுள்ளனர். அங்கு ஒருவரிடமிருந்துஇரண்டு கைத்துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர். தலா ரூ.25,000 கொடுத்து இந்தத் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர்.
இவற்றை விற்று விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.