எம்.பிக்கள் அமளி செய்தால் இனிமேல் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் எம்.பிக்கள் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட்செய்யப்படுவார்கள் என சபாநாயகர் பாலயோகி அறிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடந்த நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சமீப காலங்களில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அமளி செய்வது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. எந்த எந்தப்பிரச்சனைக்குத்தான் ரகளை செய்வது என்ற வரைமுறையே இல்லாமல், எம்.பிக்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்.

சபாநாயரின் முன் கூடி நிற்பது, அவையில் மத்தியப் பகுதியில் வந்து நின்று அரசுக்கு எதிராக

கூச்சல் போடுவது அதிகரித்து வருகிறது.

இதனால், நாடாளுமன்றம் மணிக்கணக்கில் ஒத்தி வைக்கப்படுகிறது. பல நேரங்களில் நாள் கணக்கில் கூட நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் சண்டைபோடும் இரு கட்சிகள் தங்கள் மோதலை நாடாளுமன்றத்திலும் நடத்தி அதன்மரியாதையைக் கெடுத்து வருகின்றனர்.

இது அதிமுக, திமுக, சமாஜ்வாடி கட்சி, லல்லு பிரசாத் யாதவின் ஜனதா தளம், சிவசேனை ஆகிய கட்சிகளுக்கு மிகவும் பொருந்தும்.

சமீப காலத்தில் தெஹல்கா - ராணுவ பேர ஊழல், யூடிஐ ஊழல் உள்பட பல பிரச்சனைகளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிஎம்.பிக்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

அதிமுக-திமுக மோதல்:

பல நேரங்களில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களே ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கருணாநிதி கைது சம்பவம், திமுகபேரணி வன்முறை போன்ற சம்பவங்களைக் கையில் எடுத்துக் கொண்ட திமுகவினர், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரியரகளையே பண்ணிவிட்டார்கள்.

சென்னை பேரணியின்போது தன்னைப் போலீசார் தாக்கினார்கள் என்று கூறிய திமுக எம்.பியான வெற்றிச் செல்வன் தன்னுடையசட்டையைக் கழற்றி, அரை நிர்வாணமாய் நின்று நாடாளுமன்றத்தையே கேலிப் பொருளாக்கினார். வெறும் வேட்டியுடன்நாடாளுமன்றத்திற்குள் சுற்றி சுற்றி வந்தார்.

இதற்கு அதிமுக எம்.பிக்கள் கண்டனம் தெரிவிக்க, இரு கட்சியினரும் தமிழில் ஒருமையில் திட்டிக் கொணடனர். இதையடுத்துநாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்பொருமுறையும் அதிமுக-திமுக எம்.பிக்கள் தமிழில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள ஒன்றும் புரியாமல் பிற மாநிலஎம்.பிக்கள் முழிக்க சண்டை வலுத்ததையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திற்குள் வந்தவுடனேயே ஏதாவது ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒன்றைத் தயாராகக் கையில்எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கோஷம் போட ஆரம்பித்து, பின்னர் திடீரென்று நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்குச் சென்று, கத்திக் கொண்டே இருப்பது இப்போதைய டிரண்ட் ஆகிவிட்டது.

தூங்கும் மசோதாக்கள்:

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல், சபாநாயகரும் பரிதாபமாக முழித்துக் கொண்டிருப்பார்.

"அமைதியாக இருங்கள், இருக்கையில் சென்று அமருங்கள்" என்று அவர் பலமுறை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டேஇருப்பார். ஆனாலும், எம்.பிக்கள் தொடர்ந்து ரகளை செய்து கொண்டே இருப்பார்கள்.

சபாநாயகரும் தொடர்ந்து கெஞ்சி, கொஞ்சிப் பார்ப்பார். கடைசியில், வேறு வழியில்லாமல், சபையை ஒத்திவைத்து விட்டுத்தான்செல்வார். சில முறை பகல் வரை மட்டும் ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்ற நடவடிக்கைகள், பல முறை நாள் முழுவதும்ஒத்திவைக்கப்படும் நிகழ்ச்சியும் தற்போது அடிக்கடி நடந்து வருகிறது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதால் ஏராளமான செலவும் ஆகிறது. குறித்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள்,அவ்வப்போது பைல்களிலேயே தூங்க ஆரம்பித்து விடுகின்றன. இதற்கு அப்புறம், ஒப்புதல் பெற வேண்டிய மசோதாக்களும்குறித்த நேரத்தில் சட்டமாக முடியாமல் போய்விடுகிறது.

5 நாட்கள் சஸ்பெண்ட்:

தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் எம்.பிக்களின்கோஷம் அமைந்தால், அந்த எம்.பிக்கள் அடுத்து வரும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் அமளி-ரகளைகளைத் தடுப்பதற்காக, வியாழக்கிழமை காலை நடந்தஅனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற வரலாற்றில், இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கை எப்போதும் எடுக்கப்பட்டதில்லை. இனியாவது எம்.பிக்கள்ஒழுங்காக நடந்து கொள்வார்களா என்பதை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+