விஜய்காந்தின் பொறியியல் கல்லூரி திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vijayakanthநடிகர் விஜய்காந்த் கட்டியுள்ள இன்ஜினியர் கல்லூரி இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

சென்னையிலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் மாமண்டூரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைக் கட்டியுள்ளார்விஜய்காந்த். இந்தக் கல்லூரியை விஜய்காந்தே வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

கல்லூரித் தலைவரும் விஜய்காந்தின் மனைவியுமான பிரேமலதா குத்துவிளக்கேற்றினார்.

முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரித் திறப்பு விழாவின்போதே தனது பிறந்தநாளையும் விஜய்காந்த் கொண்டாடினார். பின்னர் பலருக்கு உதவிகளையும்வழங்கினார்.

அப்போது விஜய்காந்த் பேசுகையில்,

நான் படிக்காதவன், அதனால் தான் அடுத்தவர்களை படிக்க வைத்து மகிழ்கிறேன். நாமே சொந்தக் கல்லூரி தொடங்கினால்இன்னும் பலரை படிக்க வைக்கலாமே என்ற யோசனையில் பிறந்தது தான் இந்தக் கல்லூரி.

ஈவ்-டீசிங் செய்யாமல் இந்தக் கல்லூரி மாணவர்கள் ஒழுங்காக படிக்க வேண்டும். இங்கு நன்றாகப் படித்து வெளியேறும்மாணவர்களுக்கு நாங்களே வேலை வாங்கித் தருவோம் என்றார் விஜய்காந்த்.

ஆண்டுதோறும் தனது பிறந்தநாள் விழாவின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு படிக்க உதவி செய்வது விஜய்காந்தின்வழக்கம். அதே போல நன்றாக படிக்கும் மாணவர்கள் பண வசதி இல்லாமல் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்தால்அவர்களை விஜய்காந்த் தேடிப் போய் உதவி வருகிறார்.

இவரது உதவியால் கல்வி பெற்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+