காவிரி பிரச்சனை: மத்திய அரசு மீது ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டாமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதாக முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட வேண்டிய தேவையான அளவு திறந்து விடப்படாதகாரணத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குறுவை பயிர்சாகுபடிக்கு போதிய நீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பது தொடர்பாக காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூட்டவேண்டும். காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு உதவும் வகையில் உடனடியாக நீர்திறந்து விடவேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
வரும் 26ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அமைச்சரையும், தமிழக தலைமைச்செயலரையும் பெங்களூர் அனுப்புவதாகவும், கர்நாடக அதிகாரிகளுடன் நேரடிபேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கிருஷ்ணாவுக்குஜெயலலிதா தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications