கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.27 லட்சம் அளித்த பெண்கள்
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்த 2 பெண்கள் கட்சி நிதியாக தங்கள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கள் சொத்துக்களை கம்யூனிஸ்ட்கட்சிக்கு எழுதிவைத்துள்ளனர்.
மாராத்தாள் தன் கணவர் வெள்ளைச்சாமியின் மறைவிற்குப் பின்னரும் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிவருகிறார்.இவருக்கு உறவினர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு தனது சொத்துக்களை அளிக்காமல் கட்சியின் மீது கொண்டபற்று காரணமாக தனது பெயரில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள 3 மாடி கட்டிடத்தை கட்சிக்கு எழுதிவைத்துள்ளார்.
இதேபோல திருப்பூர் திருமலை நகரைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற 71 வயது பெண்மணியும் மறைந்த தனது கணவர்மாரிமுத்துவின் விருப்பப்படி ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்சிக்கு எழுதி வைத்துள்ளார்.
இந்த 2 பெண்களும் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்ததன் உயில் சாசனத்தை கட்சியின் மாநிலச் செயலாளர்நல்லகண்ணுவிடம் ஒப்படைத்தார்கள்.












Click it and Unblock the Notifications