தலித்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும்- கிருஷ்ணசாமி
சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு உடனடியாகதுப்பாக்கிகள் வழங்கவேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு துப்பாக்கிவழங்கவேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே தூத்துக்குடி புதூர்பாண்டியபுரத்தைச் சேர்ந்த புதியதமிழகம் பிரமுகர் ராமன் கொலை செய்யப்பட்டார். பிறகு சில நாட்களிலேயே மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் பொருளாளர் முடக்காத்தான் பாண்டி கொலை செய்யப்பட்டார்.
பிறகு சமீபத்தில் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்த கணேச பாண்டியன் மற்றும் வெள்ளை ஆகியோர் குண்டு வீசிகொலை செய்யப்பட்டனர்.
நெல்லை கருங்காடு பகுதியைச் சேர்ந்த புதிய தமிழகத்தின் முன்னோடிகள் முனுசாமி மற்றும் சுரேஷ் ஆகியோர்கொல்லப்பட்டனர்.
மேலும் ஏராளமான தலித் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலித் மக்கள் மீது சில ஆதிக்க சாதியினர் நடத்தும் தாக்குதல் அதிகரித்துவருகின்றன. ஆனால் அந்த சமுதாயத்தினரின் ஆதரவு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருதி அவர்களைத்தட்டிக் கேட்கத் தமிழக அரசு தயங்குகிறது.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. இந்த தாக்குதல்களில் இருந்து தலித்மக்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்கு தமிழக அரசு துப்பாக்கிகள் வழங்குவதுதான்.
இதுபோன்ற நடைமுறைகள் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளன.
மேலும் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் மதுரையிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு எல்லா கிராமங்களிலும்புதிய தமிழகம் கட்சிக் கொடியை ஏற்ற முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications