தூத்துக்குடியில் தீ: ரூ.1 கோடி காய்கறிகள் சேதம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள ஒரு காய்கறி ஏற்றுமதி கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் மொத்தம் ரூ.1கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின.
இந்தக் காய்கறி கிட்டங்கியின் மேல்கூரையில் நேற்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. கிட்டங்கியின் மேற்கூரைதட்டிகளால் வேயப்பட்டிருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
மேலும் கூரையின் மூங்கில் தீயில் கருகி வெடித்துச் சிதறியதால், பக்கத்தில் உள்ள வல்கனைசிங் கடை, ஓட்டல்மற்றும் எஸ்.டி.டி. பூத் ஆகியவற்றிலும் தீ பரவத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்தததும் தூத்துக்குடி, சிப்காட், தெர்மல் நகர் மற்றும் கனநீர் ஆலை ஆகிய இடங்களில்இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கின.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த காய்கறிகள்,மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தீவிபத்து குறித்து கிட்டங்கியின் மேனேஜர் தனபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் தட்டப்பாறை போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.