கண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் தமிழ்தேசம் கட்சித் தலைவர்கண்ணப்பன் கூறினார்.
இதையடுத்து கண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார்.
பிறகு இவர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுக கூட்டணியில் சேர்ந்தார். இவரது கட்சிக்குகூட்டணியில் 6 இடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இளையாங்குடி தொகுதியில் எனக்கு அதிக செல்வாக்கு உண்டுஎன்று கூறி அந்தத் தொகுதியைக் கேட்டு வாங்கி அங்கு நின்றார்.
இதனால் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் சேரும்நிலை ஏற்பட்டது.
ஆனால் கண்ணப்பன் அந்தத் தெகுதியில் படுதோல்வி அடைந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற 5உறுப்பினர்களும் தங்கள் தலைவன் வழியில் தோல்வியைத் தழுவினார்கள்.
இந்நிலையில் மக்கள் தமிழ்தேசம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல கட்சித் தொன்டர்களும் கலந்துகொண்டார்கள்.
கட்சியின் நிறுவனத் தலைவர் கண்ணப்பன் விழாவில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். அப்போது அவர்கூறியதாவது,
தேர்தல் வெற்றி வாய்ப்பை பற்றிக் கவலைப்படாமல் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்துத்தொண்டர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நானும், டாக்டர் கோபாலகிருஷ்ணனும் தமிழகம் முழுவதும் 40 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து அனைத்துமாவட்டங்களிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேச உள்ளோம்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும். மேலும் எந்தெந்த தொகுதிகளில்போட்டியிட்டால் நாம் வெற்றி பெறமுடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதன்படி மதுரை, நெல்லை மற்றும்கோவை மாநகராட்சிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு கண்ணப்பன் பேசினார்.












Click it and Unblock the Notifications