காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 6 போலீசார், 2 வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதியான பூஞ்ச் நகரில், வியாழக்கிழமை நள்ளிரவுகாவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார்கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு காவலும் அதிகமாக உள்ளது.அதை மீறியும் அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வியாழக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு தீவிரவாதகிள் கையெறிகுண்டு, துப்பாக்கிமூலம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.பொதுமக்களில் ஒருவர் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஜம்மு-காஷ்மீரின் முக்கிய பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.ஆனாலும், இத் தாக்குதலை ஜைஷ்- இ- மெஃக்மூத் என்ற தீவிரவாத அமைப்புநடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள் பலி:
சாப்வால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும பணிக்கு சென்றனர். அப்போது தீவிரவாதிகள்நடத்திய தாக்குதலில் இளநிலை ராணுவ வீரர் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.
மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நீடித்துவருகிறது என்று கூறினர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications