காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 6 போலீசார், 2 வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதியான பூஞ்ச் நகரில், வியாழக்கிழமை நள்ளிரவுகாவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார்கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

காவல் துறையின் உயர் அதிகாரிகளும், அரசு நிர்வாகத்தில் உயர் பதவி வகிக்கும்அதிகாரிகளும் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு காவலும் அதிகமாக உள்ளது.அதை மீறியும் அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியாழக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு தீவிரவாதகிள் கையெறிகுண்டு, துப்பாக்கிமூலம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.பொதுமக்களில் ஒருவர் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஜம்மு-காஷ்மீரின் முக்கிய பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.ஆனாலும், இத் தாக்குதலை ஜைஷ்- இ- மெஃக்மூத் என்ற தீவிரவாத அமைப்புநடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ராணுவ வீரர்கள் பலி:

சாப்வால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும பணிக்கு சென்றனர். அப்போது தீவிரவாதிகள்நடத்திய தாக்குதலில் இளநிலை ராணுவ வீரர் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.

மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நீடித்துவருகிறது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+