காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 6 போலீசார், 2 வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதியான பூஞ்ச் நகரில், வியாழக்கிழமை நள்ளிரவுகாவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார்கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு காவலும் அதிகமாக உள்ளது.அதை மீறியும் அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வியாழக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு தீவிரவாதகிள் கையெறிகுண்டு, துப்பாக்கிமூலம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.பொதுமக்களில் ஒருவர் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஜம்மு-காஷ்மீரின் முக்கிய பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.ஆனாலும், இத் தாக்குதலை ஜைஷ்- இ- மெஃக்மூத் என்ற தீவிரவாத அமைப்புநடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள் பலி:
சாப்வால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும பணிக்கு சென்றனர். அப்போது தீவிரவாதிகள்நடத்திய தாக்குதலில் இளநிலை ராணுவ வீரர் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.
மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நீடித்துவருகிறது என்று கூறினர்.












Click it and Unblock the Notifications