ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மை- பா.ஜ.க. பாராட்டு
சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு மீண்டும் அனுமதி கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவின் பரந்தமனப்பான்மையைப் பாராட்டுகிறேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் லக்ஷ்மணன் கூறினார்.
இதில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க முன்னாள் தலைவரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான லக்ஷ்மணன்பேசினார்.
அவரது பேச்சின் முடிவில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்த பல்வேறு இந்து அமைப்புகளுக்கு மீண்டும்அனுமதி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மையைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
உடனே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையில் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் பெண் உறுப்பினர் யசோதா எழுந்து, முதல்வரின் பரந்த மனப்பான்மையைலக்ஷ்மணன் அவரது கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்வாரா? என்று கேட்டார்.
அதற்கு லக்ஷ்மணன், தக்க நேரத்தில் இதைப்பற்றி நான் தலைமைக்கு எடுத்துக் கூறுவேன் என்று கூறினார்.
பிறகு மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் இந்த உரையாடலைக்கவனித்துக் கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள் மத்தியில் எந்தச் சலனமும் ஏற்படவில்லை.