விநாயகர் ஊர்வலம்: முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி
சென்னை:
விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கு தமிழக முதல்வருக்கு இந்துமுன்னணி தலைவர் ராம. கோபாலன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்துவரும் 25, 26, 30ம் தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.
ஆனால், அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று கூறி விநாயகர் சிலை ஊர்வலத்திற்குதடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறியிருந்தார்.
இதற்கு சிவசேனா கட்சியும், இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. காவல்துறையின் தடையையும் மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவோம் என்றும்அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் விநயாகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெறும் என்று இந்துஅமைப்புகள் எழுத்து மூலமாக உறுதி அளித்திருப்பதால் விநாயகர் சிலைஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதாதெரிவித்தார்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததற்கு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில்வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 25,26 மற்றும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் விநாயகர் சிலைஊர்வலத்தை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு:
தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் சென்னையின்பல பகுதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.