பெண் போலீஸ் அதிகாரியை மானபங்கப்படுத்த முயற்சி
சிங்காநல்லூர்: (கோவை)
திருமண மண்டபத்தில் தகராறில் ஈடுபட்ட கும்பலை கலைக்க சென்ற பெண் போலீஸ்எஸ்.ஐயின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்ற கும்பலை போலீசார்தேடி வருகின்றனர்.
அப்போது அங்கு குடிபோதை கும்பல் ஒன்று மண்டபத்திற்குள் நுழைந்து ரகளையில்ஈடுபட்டது. கைகலப்பிலும் ஈடுபட்டது. இதையடுத்து திருமண வீட்டார் விநாயகர்சதுர்த்தி விழா பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரிடம் சென்றுதகவலைக் கூறினர்.
அவர் திருமண மண்டபத்துக்கு வந்து கலவர கும்பலை விசாரித்தார்.அவர்கள் அந்தபோலீஸ்காரரை சுற்றி வளைத்துக் கொண்டு அவரிடம் உன் நம்பர் என்ன? பெயர்என்ன? என்று கேட்டு தகராறு செய்தனர்.
தனியாக அந்தக் கும்பலிடம் மாட்டிக் கொண்ட அவர், நிலைமை எல்லை மீறிபோனதால் இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் எஸ்.ஐ.சரஸ்வதிக்கு தகவல் கொடுத்தார்.
அவர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிபோதை கும்பலை எச்சரித்துஅங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். ஆனால் போதை கும்பல் சரஸவதியுடன்வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரையும் கீழே தள்ளிவிட்டுவிட்டு, சரஸ்வதியின் கையைபிடித்து இழுத்தது. தகாத முறையில் நடக்க முயன்றதது.
திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த டம்ளர்களையும் வீசி எறிந்து ரகளையில்ஈடுபட்டனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் போலீஸ்எஸ்.ஐயிடம் ரகளை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.