சன் டிவி மீது வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டபோது அந்தச் சம்பவத்தை அடிக்கடி டிவியில் ஒளிபரப்புச் செய்துவன்முறையைத் தூண்டியதாக சன் டிவி நிர்வாகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சன் டிவியில் கருணாநிதி கைது நிகழ்ச்சி அடிக்கடி ஒளிபரப்பப்பட்டதால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வன்முறைமூண்டது. இதனால் தனது பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை நகர போலீஸில் இப்ராகிம் என்பவர் புகார்கொடுத்திருந்தார்.

ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தவழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சன் டிவி நிர்வாகம் மீது இப்ராகிம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளதாகவும் (எப்.ஐ.ஆர்.) கூறப்படுகிறது.

கருணாநிதி கைதானவுடன் பொது மக்கள் அதைக் கண்டிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பல பொது மக்கள் சன் டிவிஅலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு மாநகர காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. ஆனால், கருணாநிதி கைது செய்யபட்ட சம்பவம் அடிக்கடி ஒளிபரப்பட்டது.இன்னும் கூட அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த காட்சிகளில் டி.ஐ.ஜி. முகமது அலியை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாக்கும் காட்சி மட்டும் இல்லை.போலீசார் முரசொலி மாறனை தூக்கி தனியே வீசும் காட்சி மட்டும் தான் உள்ளது.

ஆனால், ஜெயா டிவியில் காட்டப்படும் வீடியோவில் முகமது அலியை மாறன் தனது மோதிரக் கையால் முகத்தில் குத்தும் காட்சிஇடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி கிராபிக்ஸ் முறையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+