திமுக ஆட்சியில் பாழானது போக்குவரத்துத் துறை: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக அரசின் போக்குவரத்துதுறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் அதிக இழப்புஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
1996ம் ஆண்டு போக்குவரத்துத்துறையின் இழப்பு ரூ. 535 கோடிதான். ஆனால்,2001ம் ஆண்டு அது ரூ 2,035 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு திமுக அரசின்ஒழுங்கற்ற ஆட்சி முறைதான் காரணம் என்றார்.
ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும்திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி மறுத்தார். அவர் கூறியதாவது:
போக்குவரத்துத்துறையில் இழப்பு ஏற்பட்டதற்கு காரணம் டீசல் விலை உயர்வும்பஸ்சின் உதிரி பாகங்களின் விலை உயர்வும்தான்.
டீசல் விலை உயர்ந்தபோதும், உதிரி பாகங்களின் விலை உயர்ந்த போதும் கூட திமுகஅரசு பஸ் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தவில்லை. ஆனாலும் இழப்பு அதிகஅளவில் ஏற்படவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் 400 சதவிகிதம் இழப்பு இருந்தது. 1990ம் ஆண்டு திமுகஆட்சியில் இருந்த போது இழப்பு ரூ. 182 கோடிதான். ஆனால் அதுவே 1996ம்ஆண்டு (அதிமுக ஆட்சியில்) ரூ. 535 கோடி என்று உயர்ந்தது.
தற்போதைய அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தமால் இழப்பை சரிகட்டினால்பாராட்டலாம் என்றார்.