கனடாவில் சி.பி.ஐ. அதிகாரி: ராஜீவ் கொலை விசாரணை
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரி கனடாநாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த வழக்கு குறித்து விசாரித்த தனிநீதிமன்றம் கொலையில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனைவிதித்துத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கொலைச் சதியில் தொடர்புடைய புலிகளின் ஆதரவாளர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க சி.பி.ஐ.அதிகாரி கனடா சென்றுள்ளார்.
இதற்காக சி.பி.ஐ. இணை இயக்குநர் கவுல் நேற்று (வெள்ளிக்கிழமை) கனடா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர்12 நாட்கள் தங்கி கனடா நாட்டு போலீசார் உதவியுடன் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
மேலும் ராஜீவ் கொலையில் தொடர்புடைவர்கள் யாரேனும் அங்கு மறைந்து இருக்கிறார்களா என்றும் அவர்விசாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் நியூஸிலாந்து நாட்டுக்குச் சென்ற சி.பி.ஐ. குழு அங்கு 2 இலங்கைத் தமிழர்களிடம் விசாரணைநடத்தினார்கள்.
பிறகு ஆஸ்ரேலியாவிலும் அதேபோல 2 தமிழர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
ராஜிவ் கொலையில் பெரும் சதி இருப்பதாக சி.பி.ஐ. கருதுகிறது. கொலைக்கான ஒரு கருவியாகவே புலிகள்பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கலாம் எனவும் இந்தியா கருதுகிறது.












Click it and Unblock the Notifications