For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிமெண்ட் கழகத்தை விற்க முயன்றது யார்? - ஆற்காடு வீராசாமி விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சிமெண்ட் கழகத்தை தனியாரிடம் விற்க கடந்த ஜெயலலிதா ஆட்சி முயற்சி செய்தது என திமுகபொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

எங்களது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தை (டான்செம்) தனியாரிடம் விற்க முயன்றதாகசட்டசபையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

உண்மையில் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சிமென்ட் கழகத்தை, நலிவடைந்த நிலையில் இருப்பதாக கூறிதனியாரிடம் விற்க 1991 முதல் 1986 வரை ஆட்சி நடத்திய அதிமுக தான் முயன்றது. இதுதொடர்பாகஅவர்களது ஆட்சிக்காலத்தில் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கூட வெளியானது.

இந்த நிலையில் நிறுவனத்தை விற்பதைத் தடுக்குமாறு சிமென்ட் கழக ஊழியர்கள் திமுக தலைவர் கருணாநிதியிடம்கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்றத்தை அணுகி நான்தடையுத்தரவு வாங்கினேன்.

உண்மை இப்படியிருக்க திமுக மீது ஜெயலலிதா பழி போடுவது தவறானது என்று ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X