கோவையில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
சென்னை-மேட்டுப்பாளையம் இடையிலான புளூமவுன்டன் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு என்ஜினும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலும், என்ஜினும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் எக்ஸ்பிரஸ்ரயிலின் எந்தப் பெட்டியும் தடம் புரளவில்லை.
ரயில்பாதை தடமாற்றம் நடந்து கொண்டிருந்தபோது தவறுதலாக எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி விட்டதாககூறப்படுகிறது. இருப்பினும் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக கோவை-இருகூர் இடையிலான ரயில் பாதையில் 4 மணி நேரத்திற்கு மேல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது ரயில் பாதை சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்துத்துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications