For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ஊர்வலம் நடத்திய பெரியார் தி.கவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் இந்து முன்னணி நடத்திய விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ஊர்வலம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 150 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.

விநாயகர் ஊர்வலத்தை வைத்து மதவாத சக்திகள் அரசியல் நடந்துவதை எதிர்த்து ஊர்வலம் நடத்தப்போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர்அறிவித்திருந்தனர்.

பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமைையில் இந்த ஊர்வல ம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பெரியார் சிலையருக்கே ஊர்வலம் நடத்துவதற்காக,சுமார் 150 பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் கூடினர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசாக் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து, ஊர்வலம் நடத்த முயன்ற கோவைராமகிருஷ்ணன் உள்ளிட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X