விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ஊர்வலம் நடத்திய பெரியார் தி.கவினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இந்து முன்னணி நடத்திய விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ஊர்வலம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 150 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமைையில் இந்த ஊர்வல ம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பெரியார் சிலையருக்கே ஊர்வலம் நடத்துவதற்காக,சுமார் 150 பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் கூடினர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசாக் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து, ஊர்வலம் நடத்த முயன்ற கோவைராமகிருஷ்ணன் உள்ளிட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications