தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் பாரபட்சம்... துரைமுருகன் புகார்
சென்னை:
சட்டசபை நிகழ்ச்சிகளின் தொகுப்பை தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்குவதில் தமிழ்நாடு திரைப்படப்பிரிவு பாரபட்சம் காட்டுகிறது என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் இன்று (திங்கள்கிழமை) துரைமுருகன் பேசுகையில்,
சட்டசபையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தனியார்தொலைக்காட்சிகளுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்தத் தொகுப்புகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டேவழங்கப்படுகிறது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் அப்படியேவிடப்படுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் காளிமுத்து, "எந்த எந்த உறுப்பினர்களின் பேச்சுக்கள் தணிக்கைசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றன என்ற பட்டியலை உறுப்பினர் துரைமுருகன் கொடுத்தால் உரிய நடவடிக்கைஎடுக்க ஆவண செய்கிறேன்" என்றார்.