திருமணமான பெண்ணிடம் ஈவ்-டீசிங்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் ஈவ்டீசிங் நடந்துள்ளது.
அதற்குப் பிறகு சமீபத்தில் ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் இளைஞர்களின் கேலி, கிண்டல் தாளாமல் விஷம் குடித்து மாணவிதற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கின. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஈவ் டீசிங் நடந்துள்ளது.
இம் மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ஐசக் என்பவரின் மனைவி விஜிலாவைப்பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த அருண், பில்காணி மற்றும் சிலர் கேலி செய்து அசிங்கமான சினிமாப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
விஜிலாவின் வீட்டு காம்பவுடன் சுவர் மீது அமர்ந்தே இந்த இளைஞர்கள் குறும்பு செய்துள்ளனர். இதுகுறித்து தனது கணவர்ஐசக்கிடம் விஜிலா கூறினார். இதையடுத்து ஐசக் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அருண்,பில்காணி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் தப்பிவிட்டனர்.