ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் மாறனுக்கு தொடர்பில்லை: மத்திய அரசு
சென்னை:
சென்னை நகர காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு அழைத்ததில் அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோருக்கு எந்தப் பங்கும் இல்லை எனமத்திய அரசு கூறியுள்ளது.
உடனடியாக மத்திய அரசுப் பணிக்கு வரவும் என்ற பேக்ஸ் செய்தியை மட்டும் மத்திய அரசு அனுப்பியதையும்,கருணாநிதியைக் கைது செய்யச் சென்றபோது மாறன், பாலு ஆகியோர் போலீசாரைத் தாக்கியதையும் இந்தஅதிகாரிகள் தங்கள் வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களது வழக்கை தீர்ப்பாயத்தின் துணைத் தலைவரும் நீதிபதியுமான சுப்பிரமணியம், தீர்ப்பாயத்தின்உறுப்பினர் பாபு ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த 3 அதிகாரிகளின் மனுவை விசாரித்த தீர்ப்பாயம்மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய அரசு பதில் மனு:
இதையடுத்து மத்திய அரசு இப்போது நோட்டீசுக்கு விளக்கமளித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்கூறப்பட்டுள்ள விவரம்:
மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோரின் தூண்டுதலால் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குமாற்றக் கோரவில்லை. இந்த மூன்று அதிகாரிகளின் தேவை மத்திய அரசுப் பணிக்குத் தேவைப்படுகிறது.
இவர்களின் அனுபவம், திறமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் இந்த அதிகாரிகளை மிக முக்கியமானபொறுப்பில் உட்கார வைக்க விரும்பினோம். இதனால் தான் அவர்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பச்சொன்னோம்.
வெறும் பேக்ஸ் செய்தி அனுப்பி இந்த அதிகாரிகளை உடனே மத்திய அரசுப் பணிக்கு அனுப்பச் சொல்லவில்லை.அதில் தகவல் மட்டும் தான் தரப்பட்டது. இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணியில் வந்து சேருமாறு இன்னும்ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.
பேக்ஸ் மூலம் மாநில அரசுக்கு மத்திய அரசு தகவல் மட்டும் தான் அனுப்பியது. இதில் எந்தத் தவறும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேரம் கேட்கும் மாறன்:
இதற்கிடையே மாறனும், பாலுவும் இந்த தீர்ப்பாயத்தில் ஒரு பதில் மனுத் தாக்கல் செய்தனர். அதில் தீர்ப்பாயம்கூறியபடி விளக்கம் தர மேலும் கால அவகாசம் தேவை எனக் கோரியிருந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications