கண்ணைத் திறந்த கன்னியாகுமரி குடிசைகள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் உள்ள குடிசைப் பகுதி மக்கள் 90 சதவீத கல்வியறிவு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்ட குடிசைப் பகுதிகளும் மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்றுள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் 87.91பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.
அதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொட்டியூர் நகரில் உள்ள குடிசைகளில் வாழ்வோரில் 85.77சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள்.
தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் 73.47 சதவீதமாகும். ஆண்கள் 82.33 சதவீதமும், பெண்கள் 64.55சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் தான் 86.72 சதவீத படித்தவர்கள் எண்ணிக்கையுடன் கல்வியறிவில் தமிழகத்திலேயேமுதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தூத்துக்குடியும் (78.13 சதவீதம்), நீலகிரி (76.89 சதவீதம்) மாவட்டமும்உள்ளன.
தர்மபுரி தான் தொடர்ந்து மிகக் குறைவான கல்வியறிவு கொண்ட மாவட்டமாக உள்ளது. இம் மாவட்டத்தில்படித்தவர்கள் எண்ணிக்கை 55.42 சதவீதம் தான்.












Click it and Unblock the Notifications