மீண்டும் வேலை கேட்டு 300 அடி உயரத்தில் போராட்டம்
தர்மபுரி:
வேலை நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 300 அடி உயர டவரின் மேல் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால், தர்மபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் வேலை கேட்டு இந்த ஊழியர்களில் 15 பேர் திங்கள்கிழமை அங்குள்ள செல்போன் டவரில் ஏறிபோராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை உடனே கீழே இறங்கச் சொல்லி போலீசார் மைக் மூலம் கோரிக்கைவிடுத்தவண்ணம் உள்ளனர்.
ஆனால், இவர்கள் இறங்க மறுத்து கோபுரத்தின் உச்சியிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலை தராவிட்டால்கீழே குதித்துவிடுவோம் எனவும் மிரட்டி வருகின்றனர். இந்த வினோதமான போராட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள்அங்கு கூடியுள்ளனர்.
மேலே ஏறியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கீழே அமர்ந்து கதறியவண்ணம் உள்ளனர்.
இது போல கோபுரத்தில் ஏறி இவர்கள் போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இவர்கள்இதே கோரிக்கையை வலியுறுத்தி இதே கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.
கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவர்கள் கோபுரத்திலேயே அமர்ந்திருந்தனர்.
ஆனால், மிக பலத்த மழை பெய்ததையடுத்து இவர்கள் கீழே இறங்கி வந்தனர்.












Click it and Unblock the Notifications