சிண்டு முடிகிறார் ஜெ. - இல. கணேசன்
சென்னை:
தே.ஜ. கூட்டணியில் சேர அதிமுக தயார் என்று கூறினால், உடனே திமுகவை பாஜக வெளியேற்றிவிடும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு, தமிழக பாஜக செயலாளர் இல. கணேசன் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த திமுக எம்எல்ஏவான துரைமுருகன், "சும்மா கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் வெளியே வந்துவிட்டால், உள்ளே போகமாட்டோம் என்றுநீங்கள் சத்தியம் செய்யத் தயாரா?" என்று கேட்டார்.
அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து அவர்களாக வெளியே வரவேண்டும் என்றில்லை.நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றி விடுவார்கள்"என்று கூறினார்.
அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து திமுக தானாக வெளியே வரவேண்டும்என்றில்லை. நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றிவிடுவார்கள்" என்று கூறினார்.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பாஜக செயலாளர் இல. கணேசன் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
"திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள உறவைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஜெயலலிதாஇவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அவருடைய இந்தத் திட்டம் பலிக்காது" என்று கூறினார் இல. கணேசன்.