பிளஸ் டூ "இம்ப்ரூவ்மெண்ட்" தேர்வு கடினமாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் டூ மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்துவதற்கு இம்ப்ரூவ்மெண்ட்"தேர்வை எழுத விரும்பினால் அனைத்துப் பாடங்களையும் மீண்டும் எழுத வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நேற்று (திங்கள்கிழமை) கல்வித்துறை மீதான விவாதத்தின் போது தமிழக கல்வி அமைச்சர்தம்பித்துரை இந்த புதிய முடிவை அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு,

12 வகுப்பில் அரசுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் தொழில் நுட்பக்கல்வி மற்றும் மருத்துவம்போன்ற கல்வியில் சேர "இம்ப்ரூவ்மெண்ட்" தேர்வு எழுதுகிறார்கள். இதுவரை அந்த மாணவர்கள் எந்தெந்தப்பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அந்தப் பாடத்தில் மட்டும் தங்கள் மதிப்பெண்ணைஉயர்த்த மறு தேர்வு எழுதி வந்தார்கள்.

ஆனால், இந்தக் கல்வி ஆண்டு முதல் அந்த முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி "இம்ப்ரூவ்மெண்ட்"தேர்வு எழுதுபவர்கள் இந்தக் கல்வி ஆண்டு முதல் 6 பாடங்களையும் திரும்ப எழுத வேண்டும்.

ஒரு பாடம் இரண்டு பாடம் மட்டும் எழுத முடியாது.

மேலும் வறுமை காரணமாக தங்கள் பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால் பள்ளிக்குச செல்ல முடியாமல் வீட்டில்குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் பலர் உள்ளனர். இவர்கள் கல்வி கற்பதுடன்அவர்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளை அருகிலேயே ஒரு பால்வாடியில் விட்டுவைக்கவும் ஏற்பாடு செய்யதமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கஜானா காலி, கடன்சுமை அதிகம் என்ற நிலை இருந்த போதிலும் முதல்வர் ஜெயலலிதா இது போன்ற பல நல்லதிட்டங்களைத் தீட்டியுள்ளார்.

இவ்வாறு கல்வி அமைச்சர் தம்பித்துரை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+