புலிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 5 ராணுவத்தினர் பலி
கொழும்பு:
இலங்கையில் செவ்வாய்க்கிழமை காலை விடுதலைப்புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள்பலியாயினர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் 2 பிரிவினருக்குமிடையேதாக்குதல்கள் வலுத்து வந்தன.
கடந்த ஜூலை 24ம் தேதி கொழும்பு விமான நிலையத்துக்குள் புகுந்து, அங்கிருந்த விமானங்களைத் தாக்கியவிடுதலைப்புலிகள், அருகிலிருந்த விமானப் படையின் தளத்தையும் தாக்கினர். இத்தாக்குதல் காரணமாக, இலங்கைஅரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 2 தரப்புகளிலும் மாறி மாறி, தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. விடுதலைப்புலிகள்முகாம்களின் மீது, இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்துவதும், அதேபோல் ராணுவத்தினர் மீதும்கடற்படையினர் மீதும் விடுதலைப்புலிகள் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வவுனியாப் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த வாகனத்தின் மீது, விடுதலைப்புலிகள் கண்ணிவெடிகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இத்தகவலை இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.