திமுக-அதிமுக சண்டையிட்டால் என்ன செய்ய வேண்டும்?பா.ம.க. எம்.எல்.ஏக்களுக்கு ராமதாஸ் யோசனை
சென்னை:
சட்டசபையில் ஆளும் அதிமுகவும், திமுகவும் சண்டை போட்டுக் கொண்டடிருந்தால் நீங்கள் வெளியேறிவிடுங்கள்என்று பா.ம.க. உறுப்பினர்களுக்கு அக்கட்வியின் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு சட்டசபையில் எப்படி நடந்துகொள்வது என்று வகுப்புகள் எடுத்துவருகிறோம்.அவர்களுக்கு சட்டசபையில் நாகரீகத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள அறிவுரை கூறிவருகிறோம்.
அவர்களும் அதன்படிதான் நடந்து வருகிறார்கள். யாரிடமும் லஞ்சம் வாங்கமாட்டோம் என்று சத்தியப் பிரமாணம்எடுத்துள்ளனர்.
சட்டசபையில் அதிமுகவும், திமுகவும் சண்டைபோடுவதையும், ஆபாசமாகப் பேசுவதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர். இனிமேல் அவர்கள் அப்படிச் செய்தால் எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும்சட்டசபையை விட்டு எழுந்து வெளியேறுமாறு கூறியுள்ளேன். எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மற்றஎம்.எல்.ஏக்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருப்பார்கள்.
ஒரு முறை அமைச்சர் பொன்னையன் என்னிடம், "உங்கள் கட்சித் தொண்டர் ஒவ்வொருவரும் எங்கள் கட்சியின் 10தொண்டர்களுக்குச் சமம். உங்கள் கட்சித் தொண்டர்ளை இராணுவம் மாதிரி வைத்திருக்கிறீர்கள்" என்று சொன்னார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் வெற்றிபெற நாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம்.
தமிழக மக்கள் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்றாக ஒரு 3-வது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றுவிரும்புகிறார்கள். அந்த 3-வது கட்சி வேறு எதுவுமல்ல, பா.ம.க. தான் அது என்று ராமதாஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications