மின் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.4,000 கோடியில் திட்டம்
சென்னை:
தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க ரூ. 4,000 கோடியில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னையில் கடும் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதாகவும் த.மா.க. ஜனநாயகப் பேரவை(சிதம்பரம் கட்சி) எம்.எல்.ஏ. புரசைவாக்கம் ரங்கநாதன் சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில்,
சென்னையில் மொத்தம் 15 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு 13,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னையின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க ரூ. 30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியைக்கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னயில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே மின் தட்டுப்பாட்டைப் போக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மாநிலமுழுவதும் புதிதாக 61 துணை மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட அளவில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பொது மக்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்நடத்துவார்கள்.
எதிர்காலத்தில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க மாநில அளவில் மிகப் பெரிய 3 திட்டங்கள்நிறைவேற்றப்படவுள்ளன. ரூ. 4,000 கோடி செலவில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு நீண்டகால அடிப்படையில் இத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுஎன்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications