காஷ்மீரில் 2 பூசாரிகள் தலையை வெட்டிக் கொலை
ஜம்மூ:
காஷ்மீரில் 2 பூசாரிகளின் தலையையும் உடலையும் கண்டந்துண்டமாக வெட்டி தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
சூரன்கோட் பகுதியில் உள்ள துந்தி பாலத்தில் உள்ள காளி அம்மன் கோவிலில் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
கோவிலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 2 பூசாரிகளையும் கண்டந்துண்டமாக வெட்டினர். பின்னர் தலைகளையும் தனியேவெட்டிக் கொன்றனர். பின்னர் கோவிலில் குண்டுகளையும் வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் ஜம்மூவில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன்முறை நேரும்அபாயம் ஏற்பட்டதையடுத்து அந்த மாவட்டம் முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முழு அடைப்புப் போராட்டம்:
இந்தக் கொடூர சம்பவத்தைக் ண்டித்து சுந்தர்பா, கலாகோட், ரஜெளரி ஆகிய நகர்களில் கடைகள்அடைக்கப்பட்டுள்ளன. முழு பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜெளரியிலும் கூடுதலாக போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications