பிரபாகரனைக் "கொல்ல" பஸ் கடத்திய வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்வதற்காக, பஸ்சைக் கடத்திச் சென்ற சிங்கள வாலிபரைப்போலீசார் விரட்டிப் பிடித்து, கைது செய்தனர்.

இலங்கை-கொழும்பு நகருக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஒரு பஸ்சை வாலிபர் ஒருவர் கடத்தினார்.

பின்னர், பிரபாகரன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் காட்டுப் பகுதியை நோக்கி வெகு வேகமாகப் பஸ்சைஓட்டிக் கொண்டு போனார்.

வேகமாகச் சென்று விடுதலைப்புலிகளின் முகாம் மீது பஸ்சை மோதச் செய்து, அதன் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவிடுதலைப்புலிகளைக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அந்த வாலிபர் சென்று கொண்டிருந்தார்.

பயங்கரக் கொலை வெறியுடன் சென்று கொண்டிருந்த அந்த வாலிபர், 12க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்துத்தள்ளிவிட்டு, ரயில்வே கேட்டையும் உடைத்தெறிந்தார்.

இதையடுத்து, போலீசார் அந்த பஸ்சை விரட்டினர். பஸ்சின் டயர்களைத் துப்பாக்கியால் சுட்டு, வேகத்தைக்கட்டுப்படுத்திய பிறகு, போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.

கைதான அந்த வாலிபரின் பெயர் பியாசேனா என்பதும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும்விசாரணையின்போது தெரிய வந்தது.

கைதானதும் அவர் போலீசிடம், "பிரபாகரனைக் கொல்வதற்காகத்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன். என்னைஏன் தடுக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+