வியாழக்கிழமை இந்தியா திரும்புகிறார் தெண்டுல்கர்
டர்பன்:
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கர் சிகிச்சையை முடித்துக் கொண்டு வரும்வியாழக்கிழமை இந்தியா திரும்புகிறார்.
இதனால் அவர் இப்போது இலங்கையில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியிலும், அதற்கு முந்தைய ஒரு நாள்போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இதையடுத்து அவரது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவைச்சரிசெய்ய கடந்த சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு அவருக்கு, சிகிச்சை நேற்றுஆரம்பிக்கப்பட்டது.
இது குறித்து டெண்டுல்கருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மார்க் பெர்குஸன் கூறியதாவது,
டெண்டுல்கருக்கு சிகிச்சை நேற்றே (திங்கள்கிழமை) ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இன்று அவரது உடலில் சிலமுக்கியமான சோதனைகள் செய்ய இருக்கிறோம். சோதனையின் முடிவை வைத்து அவருக்கு நாங்கள் தேவையானசிகிச்சைகளை அளிப்போம்.
இந்தச் சோதனைகள் செய்துகொள்வதற்காகத் தான் அவர் இங்கு வரவழைக்கப்பட்டார். சோதனை முடிந்து விட்டால்அவர் தொடர்ந்து விளையாடுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஏற்பபிரத்யோகமாகத் தயாரிக்கப்பட்ட "ஷூ"க்களை அணியுமாறு நாங்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அந்த டாக்டர் கூறினார்.












Click it and Unblock the Notifications