காதல் மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயன்ற கணவன்

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை:

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டுஅவர் மீது ஆசிட் வீசி கொல்ல முயன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திசையன்விளை சமாரியா தர்மபிறை தெருவில் வசித்து வருபவர் ராகவன். இவர்ஜோஸ்மின் (வயது 34) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குதிருமணமாகி 17 வருடமாகிறது.

இவர்களுக்கு முரளி (வயது 19), விமல் வயது (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.ஜோஸ்மின் திசையன்விளைக்கு அருகேயுள்ள புலிமான்குளத்தில் சத்துணவுஅமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

ராகவனுக்கு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில்சந்தேகம் ஏற்பட்டது.

சம்பவ தினத்தன்று, இது குறித்து ராகவனுக்கும், ஜோஸ்மினுக்கும் இடையே சண்டைமூண்டது. சண்டை முற்றியது.

இந்நிலையில் ராகவன் தான் வைத்திருந்த ஆசிடை ஜோஸ்மினின் மீது வீசினார். இதில்ஜோஸ்மினின் முகம், நெஞ்சு கருகியது. ஜோஸ்மினின் அலறல் குரல் கேட்டுஅருகிலுள்ளவர்கள் ஓடி வந்து ஜோஸ்மினை ராதாபுரம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

தன் மீது தனது கணவரே ஆசிட் வீசி கொலை செய்ய முயன்றது குறித்து ஜோஸ்மின்திசையன்வினை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில்திசையன்விளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து ராகவனை தேடிவருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+