எய்ட்ஸ்: நோயாளிகளிடமிருந்து மருத்துவர்களுக்கு

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த 4 மருத்துவக்கல்லூரி மருத்துவர்களையும் எச்.ஐ.வி. கிருமிதாக்கியது. ஆனால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து உத்திரபிரதேச மாநில எய்ட்ஸ் தடுப்பு கழகத்தின் திட்ட இயக்குனர் பச்சிதார் சிங் கூறும்போது:

கான்பூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 2 மருத்துவர்களும், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துக்கல்லூரியைச் சேர்ந்த 2 மருத்துவர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த 2 மருத்துவர்களையும் எய்ட்ஸ் நோய் வருவதற்குக் காரணமாக உள்ள எச்.ஐ.வி. கிருமிதாக்கியது.

உடனே இந்த மருத்துவர்களுக்கும் தேவையான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு, சிகிச்சையும் உடனடியாகஅளிக்கப்பட்டது. இதனால், அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கும் அபாயம் இல்லை.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் ஏதேனும் பாதிப்புஏற்படுமானால் அவர்கள் சிகிச்சைக்கான செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும். அந்த வகையில்இவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எய்ட்ஸ் நோயாளிக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் எய்ட்ஸ் நோக்கும் தாக்கும் அபாயம்இருக்கும் காரணத்தால், எய்ட்ஸ் நோய் முறிவு மருந்தை தயாராக வைத்திருக்குமாறு மருத்துவமனை கண்காணிப்புஅதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கப்பட்டவருக்கு எச்.ஐ.வி.-வைரஸ் தடுப்பு மருந்தை 72 மணிநேரத்திற்குள் கொடுத்து விட்டால்அது எச்.ஐ.வி. வைரஸை திறமிழக்கச் செய்துவிடும் என்றார் பச்சிதார் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+