தண்டையார்பேட்டைக்கு மாறுகிறது சென்னை சென்ட்ரல் ஜெயில்
சென்னை:
சென்னை சென்ட்ரல் அருகே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய சிறைச்சாலை விரைவில்தண்டையார்பேட்டைக்கு மாற்றப்படவுள்ளது.
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை இணைப்பதற்காக, மேம்பால ரயில் பாதை அமைப்பதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மத்திய சிறைச்சாலையின் அருகில் உள்ள நிலத்தை ரயில்வே துறைக்கு மாற்றம்செய்யும்படி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மத்திய சிறைச்சாலையின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்று அரசு கருதுகிறது. தெற்கு ரயில்வே,தன் சொந்தச் செலவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறையை அமைத்துத் தந்தால், அதன்கோரிக்கையை ஏற்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறப்பட்டது.
தண்டையார்பேட்டையில் உள்ள தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான இடம், புதிய சிறைச்சாலையைஅமைப்பதற்கேற்ற இடமாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையை ரயில்வே வாரியத் தலைவர் பரிசீலனை செய்து வருகிறார் என்றார் பொன்னையன்.












Click it and Unblock the Notifications