இலங்கை டெஸ்ட் - இந்தியா 234க்கு ஆல் அவுட்
கொழும்பு:
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் இன்று கொழும்பில் துவங்கியது. இதில் டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தாஸ் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளிதரன் பந்தில் ஆட்டம் இழந்தார். ரமேஷ் 46 ரன்களுடனும், டிராவிட்36 ரன்களுடனும் முரளிதரன் பந்திலேயே அவுட் ஆனார்கள்.
இந்திய அணியின் கேப்டன் கங்குலி உட்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியனை நோக்கித் திரும்பிச்சென்ற வண்ணம் இருந்தார்கள்.
இறுதியில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்தது.
இன்றைய ஆட்டத்தில் முரளிதரன் காட்டில் மழை. இவர் தனது அபார பந்து வீச்சின் மூலம் 8 விக்கெட்டுகளைவீழ்த்தினார். மீதமுள்ள 2 விக்கெட்டுகளை வாஸ் வீழ்த்திவிட்டார்.
பிறகு ஆடவந்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யாவும், அட்டபட்டும் அணிக்குச்சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இலங்கை அணி 13 ரன்கள் எடுத்த நிலையில்இன்றைய ஆட்டம் நிறைவு பெற்றது.
இதில் ஜெயசூர்யா 10 ரன்களும், அட்டபட்டு 2 ரன்களும் எடுத்துள்ளனர். உதிரி 1 ரன்.
கடந்த 2 டெஸ்ட்களில் இந்திய அணியும், இலங்கை அணியும் தலா 1 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இந்தடெஸ்டில் யார் வெற்றி பெருகிறார்களோ அவர்களுக்குத் தான் வெற்றிக்கோப்பை.












Click it and Unblock the Notifications