பள்ளியில் தூக்கில் தொங்கிய மாணவி: தூத்துக்குடியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி வளாகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டசம்பவம் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள கீழ்முந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் பால்சாமி. இவரது மகள்ரேவதி (வயது 16). இவர் தூத்துக்குடி குரூஸ்புரத்திலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவருகிறார்.

செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வளாகத்திலிருக்கும் ஒரு மரத்தில் ரேவதி தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் பள்ளி முன்பு குவிந்தனர்.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி நகர உதவி போலீஸ் கண்காணிப்பாளர், வடபாகம்போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தூக்கில் தொங்கிய ரேவதியின் கால்கள் தரையை தொட்டு இருப்பதால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்றும்,போலீசார் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

போலீசார் ரேவதியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணை எதுவும் செய்யாமல் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததற்கு பொதுமக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்கள் நகர போலீஸ் கண்காணிப்பாளரை முற்றுகையிட்டனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மக்களை போலீசார் சமாதானம் செய்தனர்.1 மணி நேரம் அங்கு பதட்டம் நிலவியது. பின்னர் மக்கள் கலைந்துசென்றனர்.

ரேவதியின் சாவு குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரேதபரிசோதனை முடிந்து பின்புதான் ரேவதியின் சாவு தற்கொலை தானா என்று தெரியவரும் என்று போலீசார்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+