எங்கே இருக்கிறது டான்சி நிலம்?
சென்னை:
ஜெயலலிதா வாங்கிய டான்சி நிலம் எங்குள்ளது என்பதில் புதிய குழப்பம் தோன்றியுள்ளது.
இப்போது இந்த வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு (அப்பீல்) மீது விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தில், இந்த நிலம் ஆலந்தூர் பகுதியில்உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆலந்தூர் பகுதியில் நிலத்தின் விலை குறைவு தான் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிலத்தை அடையாறு பகுதியில் இருப்பது போலக் காட்டி திமுக அரசு தன் மீது தவறாக வழக்குத்தொடர்ந்ததாகவும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கூறினார்.
ஆனால், இதை திமுக மறுத்துள்ளது. இந்த நிலம் அடையாறு பகுதியில் கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியில் தான்உள்ளதாக திமுக பிரமுகர்களில் ஒருவரும் வழக்றிஞருமான ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார். கிண்டிதொழிற்பேட்டையில் நிலத்தின் மதிப்பு மிக அதிகம். ஆனால், அடி மாட்டு விலைக்கு அதை ஜெயலலிதாவாங்கினார் என்று மீண்டும் கூறியுள்ளார் பாரதி.
அதே நேரத்தில் இந்த நிலத்தை மார்க்கெட் விலையை விட அதிக பணம் கொடுத்தே தான் வாங்கியதாகவும்இதனால் அரசுக்கு ரூ. 1 கோடி வரை லாபம் தான் கிடைத்துள்ளது எனவும் ஜெயலலிதா தனது வழக்கறிஞர் மூலம்கூறியுள்ளார்.
அப்பீல் மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பு வரும்போது தான் இந்தக் குழப்பம் நீங்கும்.