For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று கணவன் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், தனது மனைவியை வெட்டிக்கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தர்மரபுரி அருகே நடந்துள்ளது.

தர்மபுரிக்கு அருகே இருக்கும் இண்டூர்அள்ளியில் வசித்து வந்தவர் நாராயணன்(வயது 47). இவரது மனைவி முனியம்மாள் (வயது 43).

நாராயணன் கூலித் தொழிலாளியாக இருந்து. இவருக்கு தன் மனைவி முனியம்மாளின்நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடிசண்டை ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவும் நாராயணனுக்கும், முனியம்மாளுக்கும்இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. கோபம் தலைக்கேறிய நாராயணன்அரிவாளால் கோபம் தீர முனியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் அந்தஇடத்திலேயே முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார்.

கோபம் மிஞ்சி மனைவியை வெடிக் கொன்று விட்டோமே என்று மன வேதனைஅடைந்தார் நாராயணன். மனவேதனை தாங்காமல் அவரும் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.

காலை வெகு நேரமான பின்பும் நாராயணன் வீட்டு திறக்காத காரணத்தால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு நாராயணனும்,முனியம்மாளும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இது குறித்து இண்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இண்டூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X